Monday, July 28, 2014

ஆட்டுக்குட்டி

எங்கள் கிராமம் குக்கிராமம் என்று சொல்வோமே, அது போலத்தான் இருக்கும். சினிமாவில் காட்டுவது போல அப்டியே பச்சை பசேல்னு எல்லாம் இருக்காது. சில சமயம் மழை பெய்யும், கிணற்றில் தண்ணி இருக்கும், நிலத்துல வெள்ளாமையும் இருக்கும். 
நான் சின்னதுல இருந்தே எங்க (அம்மாவை பெத்த) தாத்தா வீட்ல தான் வளந்தேன். எங்க வீட்ல ஆடு, எருமை, மாடு, கோழி, நாய்னு வீட்ல வளர்த்துகிற எல்லாமே இருக்கும். அப்போலாம் என் நண்பர்கள்னா அது என் பாப்பு, நிம்மி, மண்டையன் (இதெல்லாம் என்னோட அட்டுகுட்டிகளின் பேரு :-) ) அப்புறம் என் நாய் குட்டி ஜூலி (ஜூலியோட கதை அடுத்த ப்ளாக் ல சொல்றேன்) . தினமும் என் பாப்பு என் கூடத்தான் கட்டிலில் படுத்திருக்கும் (காலையில் பார்த்தால் ஜமுக்காளத்தில் ஒரே ஆட்டாம்புளுக்கையாக இருக்கும். ஏம்புள்ள இப்டி பண்றன்னு எங்க ஆயாவும் திட்டி பார்த்து சலித்து போய் விட்டுடாங்க. அப்புறம் பார்த்தா எங்க ஆயாவும் நிம்மியும் அவ்ளோ friends ஆகிடாங்க. நிம்மி ஆட்டுக்குட்டி என்ன கண்டுக்காம எங்க ஆயா கட்டில்ல தான் படுத்திருக்கும். 
தினமும் சாயுங்காலம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஆடு மேய்க்க ஓடைக்கு ஓட்டிட்டு போய்டுவோம், செம ஜாலியா இருக்கும். ஓடைன்னா அதுல தண்ணி முன்னால எப்போவாச்சும் ஓடுச்சானு தெரியல, அதைத்தான் பொது தடமா ஒவ்வொருத்தர் காட்டுக்கும் (காடு என்பது ஒவ்வொருத்தர் வீடு+நிலம் மொத்தம் சேர்த்து அவங்க காடு இவங்க காடு என்று அவங்கவங்க பட்ட பேர் சேர்த்து சொல்வோம்) போற வழித்தடமா பயன்படுத்துவாங்க. எங்க ஆட்டுகுட்டிகல்லாம் "பாப்பு இங்க வான்னா" எல்லா என்கிட்டே ஓடி வரும். புதர்ல இருக்க கொடி, தலைலாம் பிச்சு போட்டா சூப்பரா சாப்ட்டுட்டு என் கூடயே சுத்திடிருக்கும். எனக்கு அப்போல்லாம் அதுல ஒரு பெருமை, சந்தோசம்... என்னமோ ஒரு நூறு பேரு என் பேச்சி கேட்டு என் பின்னால வர மாதிரி... ஸ்கூலுக்கு போனா இந்த ஆட்டுக்குட்டி கதைதான் ஓடும். 
ஆனா எது எப்படி இருந்தாலும் "ஆடு அறுக்கறவனதான் நம்பும்"னு சொல்ற மாதிரி, எதாவது நோம்பி நொடின்னு வந்தா உடனே இந்த ஆடுங்கள விலை பேசி வித்துருவாங்க. இப்போ புரியுது இதெலாம் நாம வளக்கறதே இப்டி விக்கறதுகாகதான்னு. அப்போ ஒவ்வொரு முறையும் அப்படி அழுது கத்துவேன், டிவிஎஸ் 50 இல்லனா சைக்கிள் லதான் கால கட்டி தொங்க போட்டு தூக்கிட்டு போவாங்க. வண்டி பின்னாடியே ஓடுவேன், நாலைந்து நாள் சாப்பிடாம பாப்பு பாப்புனு அழுதுட்டே கிடப்பேன். அப்புறம் மறுபடியும் இருக்குற குட்டிகளுக்கு பேரு வைப்பேன், ஒன்னாவே கூடவே கூட்டிட்டு சுத்திட்டிருப்பேன். 
இப்படி வளர்ந்த என்னால என் குழந்தைக்கு ஒரு ஆட்டுகுட்டியோ, நாய் குட்டியோ காட்ட முடியவில்லை (இப்போ இருப்பது அமெரிக்காவில்), அவனை பொறுத்த வரை ஆட்டுக்குட்டி என்பது carton rhymes-ல் வருவது தான் நிஜம். உண்மையான ஆட்டையோ மாட்டையோ காட்டினால் கூட அவனுக்கு தெரிவதில்லை.
இன்று என் இரண்டு வயது பையனுக்கு எல்லாமே தெரிகிறது "Tablet" தான் அவனுடைய ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி, எல்லாமுமாகிவிட்டது ... அவனுடைய அப்பாவித்தனமான அந்த இரண்டு வயது குழந்தைத் தனம் மிஸ்ஸாகி ஏதோ ஸ்கூல் பையன் மேசுரிட்டி இப்போதே வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு... 
சரி போகட்டும், ஒரு நாள் நிச்சயமா அவனும் ஆட்டுக்குட்டியும் கன்னுக்குட்டியும் தொரத்திகிட்டு பின்னால் சுற்றுவான், கோழிங்களோடு கொஞ்சி, நாய் குட்டியோடு புரண்டு, அரை டௌவ்சர் போட்டுக்கிட்டடு, பெரிய சைக்கிள் தள்ளி, மா மரக்கிளையில் கார் ஓட்டி, தென்னை மரம் வழுக்களோடு ஏறக்கற்று, புழுதியில விளையாடி (ஏன்னா இப்போல்லாம் தண்ணி பஞ்சத்துல நிறைய வயல் ஓட்டி போட்டு சும்மா புழுதியா தான் கிடக்குது) வயலும் வயல் சார்ந்த வாழ்கையுமாக வாழ்வதற்காகவே திரும்பவும் எங்கள் கிராமத்திற்கே சென்று சொந்தங்களோடும் பந்தங்கோளோடும் கூடிக்கொழவி வாழ வேண்டும் என்று திடமாக எழும் ஆவலோடு...  

3 comments:

  1. நெஞ்சில் பசுமையாக நிழலாடும் அழகான நினைவலைகள்.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சரண்யா.

    ReplyDelete
  2. Saranya...Please remove the word verification da...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...