Wednesday, September 17, 2014

கொஞ்சம் கதை பேசலாம் - 3

இன்னைக்கு இங்கே செம மழை... நினெச்சே பார்க்கல இந்த ஊருல இப்படி ஒரு மழைய பார்ப்போம்ன்னு. இந்த ரெண்டு நாளா அடிச்ச வெயிலுக்கு இன்னைக்கு மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுச்சி. கை விரல் முழுகுற அளவுக்கு வெளியில தண்ணி தேங்கி இருக்குன்னா பார்த்துகோங்களேன். இந்த மாதிரி மழைய பார்த்து பல வருஷங்கள் ஆச்சு.
என் பையன் ஓடி ஓடி வாசப்படிகிட்ட நின்னு தேங்கி ஓடுற மழைத் தண்ணிய பாக்கறதும், லேசான சாரல் பட்டு சிலிர்கறதும், திருட்டுத் தனமா இறங்கி விளையாட முயற்சிக்கறதும், இடி இடிச்சா ஓடி வந்து கட்டி பிடிச்சிக்கறதும், திரும்பவும் ஓடிப் போய் "rain rain go away..." ன்னு பாடறதும்... ப்பா...! ஏதோ செம ஜாலி படம் பார்த்த மாதிரி இருக்கு. இங்க வந்து இந்த ஒன்றறை வருஷத்துல இந்த மாதிரி சல சலன்னு கொட்டுற மழைய பார்க்கவே இல்லை (feeling !!!). எப்போவாவது லேசா தலை காட்டிட்டு (அதும் correctஆ weekend morning-ஆ பார்த்து) போற மழை இன்னைக்குதான் நல்லா தலையை ஆட்டியிருக்கு. ஆமாங்க, அடிச்ச காத்துல பாதி மரங்கள்ல இலை தலையையே காணோம். பாதி மரங்கள் ரோட்ல தான் கிடக்குது.
தேங்கின மழைத் தண்ணிய பார்த்ததும் பெரிய இவ மாதிரி வாடா கப்பல் விடலாம்ன்னு, news paper ல கப்பல் செய்ய try பண்ணி, எப்படி செய்யறதுன்னு மறந்து போய் ஒழுங்கா வராம, பேப்பர கசக்கி உருட்டி, இந்தாடா கப்பல்ன்னு கொடுத்தேன் ( !! ). நான் அந்த கப்பல ( !? ) செய்து முடிக்கற வரைக்கும், கப்பல் கப்பல்ன்னு கத்திக்கிட்திருந்தவன், அத கையில வாங்கியதும் "இது boll" ன்னு (ball அ  எப்போவும் ஐயா boll ன்னு தான் சொல்லுவாரு - அமெரிக்கன் இங்கிலிபிஷ்) என் மேலேயே எறிஞ்சிட்டு போய்ட்டான் (அச்சச்சோ பையன் வளர்ந்துட்டான் !!! ). இனிமேட்டு நோ ஏமாத்துபயிங்.... :-(
இந்த ஊரே (San Diego) பள்ளத்தாக்குகளில் தான் அமைந்துள்ளது. அதுவும் நிறைய இடத்தில் மலை உச்சி முகடுகளை சமன் படுத்தி apartments அல்லது தனி வீடுகள் கட்டியிருப்பார்கள். சின்னச் சின்ன மலைகளும் அதன் சரிவுகளும், ஆங்காங்கே இருக்கும் தொடர் வீடுகளும் (எல்லா வீடுகளுக்குமே பொதுவாக ஒரே மாதிரி கண்ணை உறுத்தாத வெளிர் நிறம்தான் கொடுத்திருப்பார்கள்),  புதிதாக பார்பவர்களுக்கு கொள்ளை அழகு. ஆனால் அவ்வளவு அழகையும் கோடை வெயிலால் காய்ந்த செடிகளும், புதர்களும், சருகுகளும் மறைத்து ஏதோ வனாந்திரம் போலத்தான் இருந்தது. இந்த மழைக்கு இனி ஊரே பார்க்க செளுசெளுப்பா இருக்கப் போகுது, மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் பசுமையாப் பார்த்தாதானே சூப்பரா இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களில் மழைத்துளி பட்ட மலைகளில் எல்லாம் பச்சை கோர்த்து எங்கும் சில் சில்லுன்னு இருக்கப் போகுது. மழையே அழகுதான், அதுவும் மழை பொழிந்த பிறகு பசுமை படர்ந்த இயற்கை மிக மிக அழகு... அப்புறம் ஒவ்வொரு weekend -ம் பச்சை பசேல்ன்னு தெரியற இடங்கள கிளிக் பண்ண ஜாலியா கிளம்பிடுவோம். :-)
மழை விட்டதும் "அம்மா தண்ணி போச் தண்ணி போச்..." ன்னு மேலே வானத்தை கை காட்டினான் சஞ்சு குட்டி. இனிமே "rain rain where did you go/ sanjay wants to play with you/ come again very soon/ to give us the happy boon"ன்னு பாட கத்துக் கொடுக்கணும்...!

Related Posts Plugin for WordPress, Blogger...