Wednesday, March 11, 2015

பிரின்சிபால் மேடம் !

ரொம்ப நாள் ஆச்சு, ஜாலியா ஒரு போஸ்ட் போட்டு... அதான் இன்னைக்கு பாதி தூக்கத்துலேயே எழுந்து ஒரு முக்கியமான விஷயத்தோட கலமிறங்கிட்டேன்...!
என்னடா புள்ள முக்கியமான விஷயம்ன்னு சொல்லுதே, இப்படி பில்ட் அப் பண்ற அளவுக்கு என்னடா விஷயம்ன்னு தான யோசிக்கிறிங்க.
அதாவது... நான்... இன்னைக்கு... எங்க ஊரு ஸ்கூலுக்கே  "பிரின்சிபாலா" பதவி ஏத்துகிட்டேன்.
எப்படிடா இது? அம்மணிக்கு அம்புட்டு அறிவா? எப்படி சாதியம்ன்னு தான வியக்குறிங்க!.
நடந்தத அப்படியே சொல்றேன் கேளுங்க...
இன்னைக்கு காலையில எங்க primary schoolலுக்கு போயிருக்கேன் (ஆனா நான் எதுக்காக, எப்படி, எங்க பள்ளிக்கூடத்துக்கு போனேன்னு இன்னும் சரியா விளங்க மாட்டேன்குது). நிறையா டீச்சர்ஸ் எல்லாம் ஆங்காங்கே நின்னு ஏதேதோ பேசிட்டிருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நான் HM (Head Master) ரூம எட்டிப் பாக்கறேன், திடிர்ன்னு என்னைக் கூப்பிட்டு "நீங்கதான் இனிமே இந்த ஸ்கூல control பண்ண போறீங்க, இன்னியில இருந்து நீங்கதான் நம்ம ஸ்கூலுக்கு பிரின்சிபால்"ன்னு சொல்றார். நான் அப்படியே "ஷாக்" ஆய்ட்டேன்.
ரூம விட்டு வெளிய வந்து குட்டி குட்டி புள்ளைங்களப் பாக்கறேன், என்னைப் பார்த்து அப்படியே சின்னதா smile பண்ணுதுங்க. அப்புறம், கொஞ்ச நேரத்துல புள்ளைங்க எல்லாரும் ஒரு பெரிய ஹால்ல கூடி இருக்காங்க, என்னைப்  பிரின்சிபாலா எல்லோருக்கும் stage ல announce பண்ணப் போறாங்களாம் !?
மேடையில நம்மல எதாவது பேச சொல்வாங்களோ?? யோசிச்சிட்டே ஓரமாப் போய் ஒத்திகை பாக்கறேன்.
மேடையில பேரை அறிவிச்சதும் மைக்கை கையில பிடிக்கறேன். எல்லோரும் புதுப் பிரின்சிபால் "அமெரிக்கன் இங்கிலீஷ்ல" பேசப் போறாங்களோன்னு, என் முகத்தையே பாக்கறாங்க. கதையில இங்கதான்  வைக்கறேன் ட்விஸ்ட். அப்படியே அழகானத் "தமிழ்"ல பேச ஆரம்பிக்கிறேன்.
எடுத்ததும் "என்னடா பிள்ளைகளா, புது பிரின்சிபால் எப்படி இருப்பாங்களோன்னு பயப்படுறிங்களா ?"ன்னு கேட்டுக்கு தஸ்ஸு புஸ்ஸுன்னு ஏதேதோ பேசறேன் (சூப்பரா தாங்க பேசினேன், இப்ப எழுதறப்போ பேசின dialog எல்லாம் மறந்து போச்சு. :-( ).
கடைசியா யாருமே பேசாத அளவுக்கு சூப்பர் "பஞ்ச்" ஒன்னு பேசறன் பாருங்க... அப்படியொரு கைத்தட்டல் !!
"பெத்தவங்க எதுக்காகத் தெரியுமா பசங்கள இவ்வளோ செலவுப் பண்ணி படிக்க வைக்கறாங்க? அவங்க நல்லா இருக்கணுமுன்னா? சொல்லுங்க... பசங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னுதான. நீங்க படிச்சா உங்க வாழ்க்கைதான் மாறும். மேலே ஏறும். உங்க பெத்தவங்க எதிர் பாக்கறது கடைசி காலத்துல நீங்க போடுற கொஞ்ச சோறு! அவ்ளோதான்."
(இதத்தான் (இதல்லாம் ஒரு பஞ்ச்ன்னு...)  நான் பேசினேனான்னு எனக்கே இப்ப சந்தேகமா இருக்குங்க (பவர் ஸ்டார் கூட இவ்ளோ கேவலமான ஒரு பஞ்ச பேசி இருக்கமாட்டார்). இதுக்கா அப்படி கைத்தட்டினாங்க?! நல்லவேலை! சின்னப் பசங்கன்றதுனால, புரியாம, பாவம் கைத்தட்டலன்னா நாளைக்கு "மேடம்" (நான்தான் ! ) அடிப்பாங்களோன்னு நினைச்சி கைய தட்டிபுட்டாங்க போல!? )
அதுக்கு மேல என்ன நடந்துச்சி, நான் அந்த stageஅ விட்டு இறங்கினேனா (அதுவும் அப்படி ஒரு பஞ்ச பேசிட்டு...), பிரின்சிபாலா இருந்து சாதாரண ஸ்கூல CBSC (இன்டர்நேஷனல் லெவல்) ஸ்கூலா மாத்தினேனான்னு தெரியறதுக்குள்ள, என் வாண்டுப் பையன் "வீல் வீல்"ன்னு கத்தி வெச்சி, என் பிரின்சிபால் கனவுக்கு வேட்டு வெச்சிட்டான். :-(
என் பிரின்சிபால் கனவு நனவாகறதுக்கு முன்னாடியே, கத்தி அழுது, என் பொன்னான கனவைக் கலைச்ச இவனுக்கெல்லாம், என்னை மாதிரியே ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் "பிரின்சிபாலா" வரனும், வெச்சு வெளுவெளுன்னு வெளுக்கனும்ன்னு வேண்டிக்கிட்டு, அடுத்ததா "டாக்டர் சரண்யாவா, இல்ல IAS சரண்யாவா"ன்னு  என் மூளை இப்போ discussion ல இறங்கி இருக்குது. என்ன இப்ப, ரெண்டுமே நமக்கு ரொம்ப சுலபம் தான !! :-)
சரிங்க மறுபடியும், அடுத்த போஸ்ட்ல பாக்கலாம். (தயவு செய்து அடுத்த போஸ்டாவது, இப்படி மொக்க போடாம, ஒழுங்கா எதாவது உருப்படியா போடும்மான்னு நீங்க கடுப்பாவறது என் காதுல கேக்குது, விடுங்க விடுங்க, நான் என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...) :-)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...