Sunday, August 24, 2014

வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கு....

பொதுவாக இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகள் பெரும்பாலும் படித்து முடித்ததும் பெரு நகரத்தில் நல்ல வேலை கிடைத்து, ஹாஸ்டல் அல்லது நான்கைந்து பேர் சேர்ந்து வீடு எடுத்துத் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களின் வேலை நேரம் போக மீதி நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் சில ஐடியாக்கள்...
  • காலை சென்று மாலை (9 to 6 day time job without shift) திரும்பும் பெண்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் அல்லது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நல்ல tailoring workshop இருந்தால், அங்கே உங்களுக்கு விருப்பம் உள்ள embroidery, stitching, அல்லது ஜம்கி வேலைகள், குரோசே வேலைகள் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு படிப்பதில் ஆர்வம் இருந்தால் பக்கத்தில் இருக்கும் பப்ளிக் லைப்ரரியில், membership card வாங்கி பிடித்த புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். 
  • எளிமையான அதே சமயம் உபயோகமான (உங்கள் வேலை சம்பந்தமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை) கம்ப்யூட்டர் கோர்ஸ், Photoshop, graphics, போல எதாவது கற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டு விசேஷத்தில், அல்லது tour போகும்போது எடுக்கும் போட்டோக்களை, நீங்களே அழகாக வடிவமைத்து, உங்கள் வீட்டினரை அசத்தலாம் (முக்கியமாக திருமணத்திற்குப் பின்). அவர்களுக்கும் மகிழ்ச்சி, உங்களுக்கும் கூடுதால் சந்தோஷம்.
  • எதாவது சமையல் வகுப்புகள் (cooking class) சென்று புதிது புதிதாகக் கற்றுக்கொள்ளலாம். இது இன்றையப் பெண்களுக்கு மிகவும் உதவக் கூடியது. திருமணம் ஆன பின் மிகவும் தேவைப்படக் கூடிய, பயன்படக் கூடிய ஒன்று. 
  • அழகு நிலையம் சென்று உங்களை நீங்களே எப்படி சரியாக இடத்திற்கேற்ப, அழகுப் படுத்திக் கொள்வது (presentable) என்று கற்றுக் கொள்ளலாம். நீங்கள் தினமுமோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ, அரைமணி, ஒருமணி நேரம் என உங்கள் விருப்பம் போல கற்றுக் கொள்ளலாம்.
  • Drawing, Painting, Sewing, Crafting, Mehandi, Decorations, Dance, Music, என உங்களுக்கு எதில் ஆர்வமோ அதைக் கற்றுக் கொள்ளலாம். 
தினமும் அல்லது வார இறுதியில் ஒரு மணி நேரம் சென்று கற்றுக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கே உங்களுக்கு என்று கிடைத்திருக்கும் பொன்னான நேரம் இது மட்டும்தான். படிக்கும் காலத்தில், படிப்பதற்கே நேரம் முழுவதும் போய்விடும், திருமணத்திற்கு பின், இது போலவெல்லாம் கற்றுக் கொள்ள நேரமும், சூழ்நிலையும் அமையாமல் போகலாம். அதனால், உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள, வடிவமைத்துக் கொள்ள, உங்கள் திறமைகளை வெளிக்கொணர, இதுதான் சரியான . காலம்.
புதிது புதிதாக கற்றுக் கொள்ளும்போது, உங்களுக்கு எப்போதுமே போர் அடிக்காது. அதனால் உங்கள் மனம் வேறு எந்த சிந்தனையிலும் ஈடுபடாது. உங்கள் வேலைப் பளுவின் "tension, stress" குறைய மிகச் சிறந்த வழி இது. எடுத்துக்காட்டாக, நீங்களே உங்கள் கையால் நீங்கள் கற்றுக் கொண்ட கலை மூலம் ஒரு "sweater" தைத்து உங்கள் அண்ணன் மகளுக்கோ, அக்கா குழந்தைக்கோ கொடுத்தீர்கள் என்றால், நினைத்துப் பாருங்கள், அவர்கள் எவ்வளோ மகிழ்ச்சி அடைவார்கள். என் தங்கை வேலைக்கு போய்கிட்டே, கிடைக்கற நேரத்தில் இதை பின்னிக் கொடுத்தாள்ன்னு வாழ்க்கை முழுவதும் பத்திரமாக, உங்கள் நியாபகார்த்தமாக வைத்திருப்பார்கள். உங்களுக்கும் உங்கள் நேரத்தை உபயோகமாக பயன்படுத்திய, அதே சமயம் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்திய திருப்தி கிடைக்கும்.
தோழிகளோடு பேசி, சிரித்து, டிவி பார்த்து, மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதே சமயம் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையும் திட்டமிட்டு கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை முழுதும் அந்தக் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் உங்கள் கூடவே வரும். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...